சென்னை, ஜன. 13- சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றி, பாதுகாப்பாக பயணம் செய்வதை வலியுறுத்தும் வகையில் ரெபெக்ஸ் குழுமம் சார் பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடை பெற்றது. நந்தனம் சந்திப்பு அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில் இந்த குழுமத்தின் ஊழியர்கள், சாலை பாது காப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நின்றனர். தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு (ஜன.11 முதல் ஜன.17) இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது . ஒவ்வொருவரின் விலை மதிக்க முடியாத உயிரின் மதிப்பும், சாலைகளை பாதுகாப்பாக வாக னங்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சாலை பாது காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ரெபெக்ஸ் குழுமம் ஏற்பாடு செய்த தாக குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனில் ஜெயின் கூறினார்.