districts

img

அருந்ததியர் மயானத்தில் கழிவுகள்: விஷமிகளை கண்டித்து சாலை மறியல்

திருவண்ணாமலை, ஜுன் 25- திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை அருகே உள்ள அருந்ததியர் மயானத்தில் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது .  அதை தடுப்பதற்காக வேலூர் சாலை மற்றும் அவலூர்பேட்டை சாலை களின் இணைப்பு சாலை  தற்காலிகமாக மூடப்பட்டுள் ளது. பவுர்ணமி தினத்தை  முன்னிட்டு வெளியூர் பயணி கள் வசதிக்காக அந்த சாலை திறக்கப்பட்ட நிலை யில்  செவ்வாயன்று (ஜுன்  25) மீண்டும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டதால், அதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து  வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் மயானத்தில் கழிவுகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.