districts

வாலிபர் சங்க கிளை உதயம்

திருப்பத்தூர்,டிச.28- திருப்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியகரம் ஊராட்சி அண்ணா நகர் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிப சங்க கிளை துவக்கப்பட்டது.  தலைவராக வேலு, செயலாளராக சதீஷ் , பொருளாளராக விஷ்ணு ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.  கிளை துவக்க விழாவில் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் ரவி துவக்க உரையாற்றினார். சிஐடியு அமைப்பாளர் கேசவன், ரங்கன், ரயில்வே ஊழியர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மற்றும் பலர் உரையாற்றினர்.