சிதம்பரம், டிச. 17- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேலங்கிப்பட்டு ஊராட்சியில் கொரோனா காலம் உள்ளிட்ட கடந்த 8 ஆண்டுகளாக அதே ஊரைச் சேர்ந்த புஷ்பலதா, பாரதி, உஷாராணி, எழிலரசி, ராஜேந்திரன் ஆகி யோர் தூய்மை பணியாளர்களாகப் பணி யாற்றி வந்தனர். இந்த நிலையில் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் அவர்களின் வீடு களில் உள்ள வேலைகளையும் சேர்த்து செய்யக் கூறியதால் இவர்கள் புறக்கணித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், தூய்மை பணி யாளர்கள் 5 பேரையும் நீக்கிவிட்டு புதிய வர்களை வேலைக்கு அமர்த்தி பணியை கடந்த 1 மாதகாலமாக மேற்கொண்டுள்ள னர். இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியச்செயலாளர் விஜய் தலை மையில் சிபிஎம், விசிக இணைந்து பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலு வலரிடம் மனுஅளித்தனர். மேலும் சரியான நடவடிக்கை இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவ தாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலை யில் பணி நீக்கம் செய்யப்பட்ட 5 பேருக்கும் மீண்டும் வேலை வழங்குவதாக உறுதி கூறி உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பணி ஆணை வழங்கினார். மீண்டும் வேலை கிடைக்க உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட அனைவருக்கும் மீளப்பணிக்கிடைத்த பணியாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.