புரட்சியாளர் சேகுவேரா மகள் அலெய்டா குவேராவிற்கு புதனன்று (ஜன.18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆனிராஜா, மூத்த தலைவர்கள் சி.மகேந்திரன், சுப்புராயன் எம்.பி., துணைச் செயலாளர்கள் மு.வீரபாண்டியன், நா.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.