districts

img

புதிய அறிவிப்பை மறுபரிசீலனை செய்க புதுச்சேரி போக்குவரத்து ஆணையரிடம் சிஐடியு வலியுறுத்தல்

புதுச்சேரி,ஜூன்.26-

    பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் ஏற்றி செல்வதற்கான புதிய அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய  வேண்டும் என்று சிஐடியு தலைவர்கள்   போக்குவரத்துதுறை ஆனணயரை  நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

    சிஐடியு புதுச்சேரி மாநில செயலாளர் சீனுவாசன் தலைமை யில், புதுச்சேரி மாநில ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள்  மணவாளன்,  விஐயகுமார்,  குமார், நூர்முகமது, ஆனந்து ஆகியோர்  மாநில   போக்குவரத்து துறை ஆனையர் சிவக்குமாரை  சந்தித்து பள்ளி மாணவர்கள் ஏற்றி செல்வதற்கான புதிய அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்த்தி கடிதம் வழங்கினார்கள். அக்கடித்தில் கூறியிருப்பதாவது.

     புதுச்சேரி புஸ்ஸி வீதியில் பள்ளி  குழந்தைகளை அழைத்துச் சென்ற  ஆட்டோவும், பேரூந்தும் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளிக் குழந்தை கள் எட்டு பேரும்,   ஆட்டோ ஓட்டுநரும்  படுகாயம் அடைந்தனர்.  இந்த விபத்து  சம்பவம்  பெற்றோர்கள் மத்தியிலும், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது போன்ற விபத்தை தவிர்க்க ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் கூடு தல் கவனத்துடனும் பள்ளி குழந்தை களின் உடைமைகளை ஒழுங்குபடுத்தி கவனத்துடன் அழைத்து செல்ல வேண்டும் என்ற  புரிதலை  ஏற்படுத்தி உள்ளது.  

    அதே வேளையில் புதுச்சேரியில் ஆட்டோ தொழிலை நம்பி சுமார்      5000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். புதுச்சேரி வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருக்கக்கூடிய மாநிலமாக வும், வேலைக்கான எந்த உத்தரவா தம் இல்லாத மாநிலமாக மாறி கொண்டிருக்கின்றது. சுய தொழில் செய்பவர்களாக ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். இந்நிலையில்   புஸ்ஸி வீதி   சம்பவத்தை சுட்டிக்காட்டி 12 வயது  வரை உள்ள மாணவர்கள்  5நபரை மட்டுமே ஆட்டோவில்  அழைத்துச் செல்லலாம், அதற்கு மேல் வயது உள்ள  மாணவர்கள்  மூன்று பேரை  மட்டுமே  அழைத்து செல்ல வேண்டும்.  கூடுதலாக மாணவர்களை அழைத் துச் செல்லும் ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறுபவர்களின்  ஆட்டோ  பர்மிட் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளது. இந்த அறிவிப்பு   ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு பேரதிர்ச்சி யாக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து அதிக கட்டணத்தை பெற்றோரிடத்தில் வசூலிக்க முடியாத நிலையில்தான், குறைந்த அளவில் பாதுகாப்புடன் மாணவர்களை ஆட்டோக்களில் அழைத்து செல்லப்பட்டு வருகிறார் கள்.

    எனவே புதுச்சேரி போக்குவரத் துறையின் புதிய அறிவிப்பை  மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிஐடியு ஆட்டோ சங்கம் வலியுறுத்தி கேட்டுகொள்கிறது.  

    இவ்வாறு அக்கடித்த்தில் கூறப்பட்டுள்ளது.