districts

img

ஓய்வுபெற்ற பீடித் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் 6,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு பி.காத்தவராயன், கு.மு.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்பி.ராமச்சந்திரன் (சிஐடியு), கலைநேசன் (தொமுச), எஸ்ஆர்.தேவதாஸ் (ஏஐடியுசி), எம்.ஏகாம்பரம் (ஐஎன்டியுசி) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.