தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட அனகாபுத்தூர் தாய் மூகாம்பிகை நகர், டோபிகானா, சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். அடையாறு கரையோரம் அமைந்துள்ள பகுதிகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளியன்று (செப்.1) அனகாபுத்தூரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமோதரன் மற்றும் அனகை முருகேசன் (தேமுதிக), பூபாலன் (சிபிஐ) உள்ளிட்ட பலர் பேசினர்.