சென்னை, ஏப். 4 - அரசு ஒதுக்கிய நிலத்தில் வசிப்போரை வெளியேற்றும் முயற்சிகளை கைவிட வேண் டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி 155ஆவது வட்டத்திற்கு உட்பட்ட ராமபுரத்தில், சர்வே எண் 239/2ல் சுமார் 600 வீடுகள் உள்ளன. 1994ஆம் ஆண்டு 276 குடும்பங்களுக்கு தலா 600 சதுரஅடி வீதம் குடிசை மாற்று வாரியம் இடம் வழங்கியது. 2001ஆம் ஆண்டு பாட்டை புறம்போக்கில் வசித்து வந்த 77 குடும்பங்க ளுக்கு அரசு மாற்று இடமாக இதே சர்வே எண்ணில் 400 சதுர அடி பரப்பு கொண்ட மனையை வழங்கியது. குடியிருப்போர் நிலத்திற்கான தொகையை அரசுக்கு செலுத்தியதால், வாரி யம் விற்பனை பத்திரத்தை கொடுத்துள்ளது. ஒருபகுதி வீடுகளுக்கு அரசு பட்டா கொடுத்துள்ளது. இதனையடுத்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சிலர் வீடுக ளையும் கட்டியுள்ளனர். இந்த நிலையில் 2019ம் ஆண்டு தொடரப் பட்ட ஒரு வழக்கை தொடர்ந்து, அதிகாரி கள் சம்மன் கொடுத்து வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், குடியிருப்புகளை அகற்றும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும். வீடுகள், கடைகளுக்கு சீல் வைக்க கூடாது. தற்போது வசித்து வரும் அனைவருக்கும் நில வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண் டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி திருமலை நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் சங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் திங்களன்று (ஏப்.4) ஊர்வலமாக சென்று 155வது வட்ட மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர். நூற்றுக்கணக்கான மக்களிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்ட மாமன்ற உறுப்பினர் ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். இந்தப் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மதுரவா யல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ், பகுதிக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, குமரகுருபரன், ரத்தினகுமரன், கிளைச் செய லாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.