கடலூர், ஜன.13- கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு, தோட்டப்பட்டு அனைத்து நகர் குடியிருப்போர் நல சங்கம் தோட்டப்பட்டு ஊராட்சிமன்றம் சார்பில் மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விழா கெண்டாடப்பட்டது. ஊராட்சி தலைவர்கள் பச்சையப்பன், குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் பி.வெங்கடேசன், செயலாளர் பாஸ்கர் வரவேற்றனர். சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், இணை பொது செயலாளர் எஸ்.தேவநாதன், பொருளாளர் வெங்கட் ரமணி, உதவி பொதுச் செயலாளர் சிவசங்கர் குருநாதன், செயற்குழு உறுப்பினர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.