districts

img

ஒருங்கிணைந்த சுனாமி எச்சரிக்கை மையம்

கடலூர், செப். 2- கடலூர் தொகுதி மக்களவை உறுப்பி னர் விஷ்ணு பிரசாத் திட்டம் , அனைத்து குடியிருப்போர் சங்க கூட்டமைப்பு சார்பாக பொதுச்செயலாளர் பி.வெங்கடேசன், சிறப்புத் தலைவர் எம்.மருதவாணன், பொரு ளாளர் வெங்கட்ரமணி, மற்றும் கூட்ட மைப்பு நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் ஆன்மீக சுற்றுலாத் தலமாக அறிவிப்பு செய்து தரம் உயர்த்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தின் பிரதான ஆறு களில் தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, வெள்ளாறு, மணிமுத்தாறு மிகவும் மாச டைந்து உள்ளன. இதை மாசு இல்லாமல் பாதுகாக்க ஒன்றிய அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பெற்று தர வேண்டும். அதிக போக்குவரத்து விபத்து நடக்கும் மாவட்டமாக கடலூர் மாவட்டம் உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மேம்பாலம், மற்றும் ஈரடுக்கு மேம் பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடலூர் செம்மண்டலம், சாவடி, ஆல் பேட்டை, திருப்பாதிரிப்புலியூர், ஆகிய சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்க வேண்டும். மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு உடனடி யாக ரத்து செய்யப்ப செய்ய வேண்டும். டெல்டா பகுதி பாதுகாக்கப்பட வேண்டும்.  கடலூர் மாவட்டம் இயற்கை பேரி டர் தாக்கும் மாவட்டமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளதால் கடலூரில் ஒருங்கி ணைந்த சுனாமி எச்சரிக்கை மையம், நவீன வானிலை மையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.