சென்னை, பிப்.13 - தரமணி பகுதியில் நிலவும் குடி மனைப் பட்டா, கழிவு நீர் பிரச்ச னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க ப்படும் என்று 178ஆவது வட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.பாஸ்கரன் உறுதி அளித்துள்ளார். திமுக தென்சென்னை தெற்கு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாஸ்கரன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 178ஆவது வட்டத்தில் போட்டியிடுகிறார். திமுக ஆட்சியின் சாதனைகளையும், அந்தப் பகுதியில் செய்யப்பட்டுள்ள மக்கள் நலப் பணிகளையும் பட்டியலிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும், வெற்றி பெற்ற பிறகு செய்ய உள்ள பணிகளை வாக்குறுதியாக அளித்து வாக்கு சேகரிக்கிறார்.
வாக்குறுதிகள்
அதன்படி, தரமணியில் 45 ஆண்டு களாக அண்ணா பல்கலைக் கழக இடத்தில் வசிப்போருக்கு நில உரிமை மாற்றம் செய்து தரப்படும். குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு செய்த இடங்க ளுக்கு விற்பனை பத்திரம் (சேல்டீட்) பெற்றுத் தரப்படும். தரமணியில் பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது. எனவே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். வட்டம் முழுவதும் உள்ள கழிவு நீர் கட்டமைப்பு மறு சீரமைக்கப்படும். பாரதி நகர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க துரித நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மழைக் காலங்களில் தரமணி பகுதி நீர்நிலைகளை போல் மாறிவிடுகிறது. மழை வெள்ளம் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் வாய் வசதி ஏற்படுத்தப்படும். குறிப்பாக, பெரியார் நகரில் சிறுமழைக்கு கூட தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படு கின்றனர். இந்தப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற தேவையான கட்டமைப்பு வசதி முன்னுரிமை கொடுத்து செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சுமார் 75 ஆயிரம் பேர் வசிக்கக் கூடிய இந்த வட்டத்தில் ஒரு சமூக நலக் கூடம் கூட இல்லை. தரமணி பேருந்து நிலையம் அருகே, பயன் பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ள இடத்தில் சமூக நலக் கூடம் அமைக்கப்படும். பவானித் தெருவில் உள்ள காலி இடத்தில், பூங்கா, உடற்பயிற்சிக் கூடம், நியாயவிலைக் கடை கட்டிடம் அமைக்கப்படும். கானகத்தில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 470 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பை புதுப்பித்து கட்டித்தரும் பணிகள் துரிதப்படுத்தப்படும். எஸ்ஆர்பி டூல்ஸ், அண்ணாநகரில் உள்ள குடும்பங்களுக்கு சொத்துவரி விதிக்க தடையாக உள்ள பிரச்சனைகள் சரி செய்யப்படும்.
மினிபேருந்து
குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் புதைவடமாக மாற்றப்படும். திருவான்மியூரிலிருந்து டைடல் பார்க், கானகம், கழிக்குன்றம் வழியாக தரமணிக்கு இயக்கப்பட்டு வந்த மினி பேருந்து மீண்டும் இயக்கப் படும். 178ஆவது வட்டத்திற்கான மாந கராட்சி அலுவலகம், 180ஆவது வட்டத் தில் உள்ளது. அதை மாற்றி, 178ஆவது வட்டத்திற்கு கொண்டு வரப்படும். சென்னை பள்ளிகளின் தரம் உயர்த் தப்படும்.
சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும்
கோதாவரி தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல் படும் வகையில் தரம் உயர்த்தப்படும். கானகம் சுடுகாட்டை சீரமைத்து மின்ம யானமாக மாற்றப்படும். இஸ்லாமியர் களுக்காக அடக்க ஸ்தலம் (கபர்ஸ்தான்) அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் உள்ளிட்ட வாக்குறுதி களை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த வாக்கு சேகரிப்பில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளரு மான மா.சுப்பிரமணி யன், தமிழச்சி தங்கபாண் டியன் எம்பி, வேளச்சேரி மேற்கு பகுதிச் செயலா ளர் சு.சேகர், வட்டச் செய லாளர்கள் க.பார்த்திபன், ம.தமிழரசு, பொ.த. மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் அசன் மவு லானா மற்றும் கூட்டணி கட்சியினர் ஈடுபட்டுள்ள னர்.