புதுச்சேரி, ஏப். 20- வாரிசுதாரர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என காவலர்கள் கோரிக்கை விடுத்தனர். புதுவை அரியாங்குப்பத்தில் காவலர்கள் குறை கேட்பு கூட்டம் தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப் பாளராக சீனியர் காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா கலந்து கொண்டார். கூட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், தற்கொலை, குற்றச் சம்ப வங்கள், விபத்தில் சிக்குபவர்களை உடனடி யாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழகத்தை போல புதுவையி லும் வாரிசுதாரர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். காவலர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடு வதால் குடும்பத்தை சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை. எனவே வார விடுமுறை அளிக்க வேண்டும். குரூப் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை தொடங்க வேண்டும். குற்றத்தை குறைக்கும் வகை யில் தெருக்களில் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்த வேண்டும். இரவு நேரத்தில் மின் தடையால் பணிகள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையத்திற்கு என இன்வெர்ட்டர், ஜெராக்ஸ் மிஷின் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொகை அதி கரிப்பாலும் குற்றச்சம்பவங்கள் நூதன முறையில் நடந்து வருவதால் பற்றாக்குறை வாக உள்ள காவலர் காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை காவலர்கள் முன்வைத்தனர்