புதுச்சேரி, நவ.21- பொது சொத்துக்களில் பட்டியலின மக்களுக்கு உரிய பங்கு வழங்க சட்டம் இயற்றிட வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை புதுச்சேரி சிறப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது. அம்பேத்கரிய, பெரியாரிய, பொதுவுடமை இயக்கங்கள் ஒருங்கி ணைக்கும் சிறப்பு மாநாடு புதுச்சேரியில் நடை பெற்றது. தலித் பழங்குடி கூட்டமைப்பின் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீல.கங்காதரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம்,இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு துணை பொதுச்செய லாளர் மூ. வீரபாண்டியன், புதுச்சேரி மாநில செய லாளர் அ.மு.சலீம், எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சிவா (திமுக), காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஆனந்தராமன், ஒருங்கி ணைப்பாளர் ஜி.ராமசாமி உட்பட பலர் பங்கேற்று பேசினர். தீர்மானங்கள் பட்டியலின மக்களுக்கு 5 ஏக்கர் நிலம், வீடு, மனை, தொழில் வர்த்தகம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர்க ளுக்கு விகிதாச்சாரா அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை, விஸ்வகர்மா யோஜனா ஆகியவற்றை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசு துறை மற்றும் பொதுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. ஆர்ப்பாட்டம் டிச.4 அன்று நாடு முழுவதும் இருந்தும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்று சேர்ந்து சாதி ஒழிப்பு போராளிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி- ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி, காரைக்காலில் இருந்து திரளாக பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.