விழுப்புரம், மார்ச் 14- விழுப்புரம் ஆயந்தூர் மற்றும் கூடலூர் கிராம ஏரிகளின் ஆயக்கட்டுத் தலைவர் பதவிகளை தனித்தனியாக பிரித்துக் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் வட்டத்திற்குட்பட்ட ஆயந்தூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள், விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதுகுறித்து கூறியதாவது:- ஆயந்தூர் மற்றும் கூடலூர் கிராமத்தில் ஏரிகள் தனித்தனியாக உள்ளன. ஆனால் இரண்டு ஏரிகளுக்கும் ஆயக்கட்டு தலைவர் பதவி ஆயந்தூர் கிராமத்தில் உள்ள விவசாய சங்கத்திற்கு வழங்கப்பட் டுள்ளது. இரண்டு கிராமத்திற்கும் மோதல் உள்ளதால் ஆயக்கட்டுத் தலைவர் பதவியை தனித்தனியாக பிரித்து விவசாய சங்கங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.