சிதம்பரம், பிப்.12- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பணிநிரவல் செய்யப்பட்டு ள்ளனர். இவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை(பிப்.13) ஒன்று கூடினர். அப்போது, முந்தைய ஆட்சி யில் பணிநிரவல் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி, பெண் ஊழியர்கள் என சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 800 ஊழியர்களை ஒப்பந்த நிபந்தனைப்படி அண்ணாமலைப் பல்கலைக்கழக பணிக்குச் சுழற்சி முறையில் அழைக்க வேண்டும். பணிநிரவலால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊழியர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவருக்கு குறைந்தபட்சம் மாதம் ஊதிய ரூ. 10 ஆயிரம் வழங்கி தற்காலிக பணி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்வில் ஊழியர் நலச் சங்கத்தின் தலைவர் குமரவேல், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் முருகன், வேல்ராஜ், யாதவ்சிங், வாணி ராஜன், முருகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், பல்கலைக்கழகத் துணை வேந்தர் கதிரேசனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர், அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்தார்.