ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் அருந்ததி சமூகத்தை சேர்ந்த மக்கள் தூய்மை பணி செய்து வருகின்றனர். பணி ஓய்விற்கு பிறகு குடியிருக்க வீடு இன்றி அவதிப்படுகின்றனர். இந்நிலையில் சிபிஎம் ஆற்காடு தாலுகா செயலாளர் ஜி. மதியழகன் தலைமையில் வியாழனன்று (டிச. 26) ஆற்காடு வட்டாட்சியரிடம் வீட்டுமனை கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆற்காடு தாலுகா குழு உறுப்பினர் முரளி தாஸ், ஜானகிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.