சென்னை, ஜூன் 16- சட்டத்திற்கு விரோத ஆன்லைன் விளையாட்டுக்களை களைய வேண்டும் என்றும் செஸ், கால்பந்து, கிரிக்கெட் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்ககளை முறைப்படுத்த வேண்டும் என்றும் மின்னணு விளையாட்டு சம்மேளனம் (இ ஜிஎஃப்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இஜிஎஃப் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் பார்டே கூறுகையில் தற்கொலைகள், நிதி இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுக் களை அகற்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை ஆக்கப்பூர்வ மான நடவடிக்கை என்று கூறினார். இது விளையாடுவோர் நலன்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். பொறுப்புடன் கூடிய விளையாட்டுக்களை ஊக்கப்படுத்துவதோடு விளையாடுவோருக்கு பண இழப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்தும் விளை யாட்டுக்களையும் சட்டவிரோதமாக செயல்படும் ஆன்லைன் விளையாட்டுக்களையும் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனறும் அவர் கேட்டுக்கொண்டார்.