districts

img

அறநிலையத்துறை ஆணையரிடம் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ள கே.வி.முரளிதரனை, திங்களன்று (பிப்.20) தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் தெ,வாசுகி, பொதுச்செயலாளர் சி.சு.பால்ராஜ் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, உதவி ஆணையர் பதவி உயர்வில் அமைச்சுப் பணியிடங்களில் கண்காணிப்பாளருக்கான 30 விழுக்காடு ஒதுக்கீட்டை  நிரந்தரமாக்க தனி அரசாணை வெளியிட வேண்டும், 50 விழுக்காட்டிற்கும் மேலான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் நியமனம் பெற்ற பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.