திருவண்ணாமலை, செப். 8- திருவண்ணாமலை அடுத்த நல்லவன் பாளையம் கிராமத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 13 குடும்பம் 30 ஆண்டு களாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இடத்தை நத்தம் கிராம கணக்கில் பதிவு செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பழங்குடியினர் வசிக்கும் வீடுகள் நத்தம் கிராம கணக்கில் பதிவு செய்ய வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.