சென்னை, ஜூலை 19 -
தமிழ்நாடு அரசால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை கள் மீண்டும் திறக்கப்பட்ட தற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பள்ளிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகாமை யில், மக்களுக்கு இடையூ றாக உள்ள 500 அரசு மது பான (டாஸ்மாக்) கடை களை மூடுவதாக ஜூன் 21 அன்று அறிவித்தது.
இதன்படி சென்னை வில்லிவாக்கம் பகுதி, ரயில்வே ஸ்டேஷன் சாலை, அரசு உதவி பெறும் சிங்காரம் பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் (கடை எண் 481), அயனாவரம் மார்க்கெட் பகுதியில் (எண் 342) இருந்த இரண்டு கடைகள் மூடப்பட்டன.
ஆனால் 20 நாட்களுக்கு பிறகு ஜூலை 11 அன்று மேற்கண்ட இரண்டு கடை களும் திறந்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (ஜூலை 18) அந்தந்த பகுதி களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநரை சந்தித்து புதனன்று (ஜூலை 19) பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆர்.மதியழகன், 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, பகுதி குழு உறுப்பினர்கள் வி.டில்லி பாபு, ஏ.எல்.மனோகரன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.