திருவள்ளூர், மே 25-
ஐயர் கண்டிகை கிராமத்திற்கு சொந்த மான 11 ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிர மித்துள்ளதை அகற்றி, வேலி அமைத்து தரப்படும் என கும்மிடிப்பூண்டி பிடிஒ எழுத்து பூர்வமாக உறுதியளித்தால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி வட்டம், கெட்னமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட ஐயர் கண்டிகை கிராமத்திற்கு சொந்தமான 11 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை அதே கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.
ஐயர் கண்டிகையில் நெல் களம், குடோன், சமுதாய கூடம், குடிநீர் மேல்தேக்க தொட்டி, மரக்கன்றுகள் நட போன்ற தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை மீட்க வேண்டும் என கிராம சபையில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து ஊராட்சிக்கு சொந்தமான நிலத்தை வட்டாட்சியர் அளந்து கல் நட்டனர்.இரண்டு மாதங்கள் ஆகியும், நிலத்தை அளவீடு செய்த நிலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கள் நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டு மாதங்கள் கடந்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், வெள்ளியன்று (மே 26), கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறி வித்தனர்.
இந்த சூழலில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வியாழனன்று (மே 25) தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடைத்தினார். அப்போது ஒரு மாதத்தில் வேலி அமைத்து, நிலங்களை ஊராட்சியிடம் ஒப்படைக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்திருந்தார்.இதனை நிலையில் போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டது.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவரும், கவுன்சிலருமான எம்.ரவிக்குமார், துணைத் தலைவர் பி.ஆண்டவன், மகளிர் சுய உதவிக் குழு வினர் கலந்து கொண்டனர்.