districts

img

பழைய இரும்பு தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய இருப்பு பாதை அமைக்கும் பணி

அச்சரப்பாக்கம் அருகே ரயில்வே தண்டவாளம் அமைக்கும் இயந்திரம் தடம் புரண்டதால் ஞாயிறன்று பகல் சென்னை எழும்பூர் வந்த வைகை ரயில் உள்பட பல ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. அச்சரப்பாக்கம் அருகே சென்னையில் - திருச்சி  ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது அதாவது பழைய இரும்பு தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய இருப்பு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நடைபெறும்போது தானியங்கி தண்டவாளம் பொறுத்தும் இயந்திரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.