சென்னை, டிச. 9- சென்னை மாவட்டத்தில் உள்ள 200 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் வியா ழனன்று (டிச. 9) வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் விரைவில் நடை பெற உள்ள நிலையில் புகைப்படத் துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டி யலை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை யில் வெளியிட்டார். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 61,18,734 ஆகும். இதில் ஆண் வாக்கா ளர்கள் 30,23,803,. பெண் வாக்காளர் கள் 30,93,355. மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் 1576 பேர். இதில் குறைந்த பட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 159 ஆவது வார்டில் 3,116 வாக்களர்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் 137ஆவது வார்டில் 58,620 வாக்காளர்களும் உள்ளனர். 200 வார்டு அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட் டுள்ளது. சென்னை பெருநகர மாநக ராட்சிக்கு நடைபெற உள்ள உள் ்ளாட்சி தேர்தலுக்காக மொத்தம் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளது. இதில் அதிகபட்சமாக தேனாம் பேட்டை மண்டலத்தில் 622 வாக்கு சாவடிகளும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.