districts

img

பழங்குடிமக்களுக்கான நிதியை முறையாக செலவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூன் 27-

    பழங்குடி இன மக்களுக்கென்று ஒதுக்கிய நிதியை அவர்களுக்கே செலவிட  வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 27) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருத்தணி, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டங்களில்  50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர் இன  மக்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின் சார்பில் குடிமனை பட்டா,  தொகுப்பு வீடுகள், சாலை, பாதுகாக்கப் பட்ட குடிநீர், மின் இணைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து போராடியும் வருகின்றனர்.

     இந்த நிலையில் மாவட்டம் முழுவதி லும் உள்ள  பழங்குடி இன மக்கள்  கோரிக் கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 27), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

    இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார்.இதில் மாநில துணைச் செய லாளர்கள் ஜி.கெங்காதுரை, பிரகாசம், மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, பொருளா ளர் குமரவேல்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் எஸ்.கோபால், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கலையரசன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பத்மா  உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.