காஞ்சிபுரம் மாவட்டம், சுதந்திரப் போராட்ட காலத்தை தொடர்ந்து கலைநயமிக்க கலை களுக்கு பெயர் போன ஒரு மாவட்ட மாகும். தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரில் குறிப்பாக கை நெசவு, பட்டு நூல் நெசவு தொழிலாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். தொழி லாளர்களும், விவசாயிகளும், விவ சாய தொழிலாளர்களும் நிறைந்த காஞ்சிபுரத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து போராடுவதற்கான வியூகங்களை வகுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட 24 வது மாநாடு குன்றத்தூர் வட்டம், படப்பையில் நடைபெறுகிறது. இந்த வட்டத்தில் தான் செம்பரம் பாக்கம் ஏரி உள்ளது. சோமங்கலம், நடுவீரப்பட்டு ஆகிய பகுதிகளில் விவசாயமும் படப்பை, புஷ்ப கிரியில் பண்ணைகளும், தோட்டப் பயிர் விவசாயமும் செய்து வந்தனர். விவசாயம் செய்த இந்தப் பகுதிகள் தற்போது கான்கிரீட் கட்டிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. படையெடுக்கும் ஆலைகள்: போராடும் தோழர்கள் உலகமே வியந்து பார்க்கக்கூடிய காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றைக்கு பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் என ஏறக்குறைய 2500 தொழிற்சாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் சுமார் 16 லட்சம் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் பணிபுரிய தொழிலாளர்களுக்கு அடிப்படை தேவைகள், வசதிகள் மற்றும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தொழிற்சங்க இயக்கங்கள் களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறது. உரிமைகளை சுரண்ட அனுமதியோம் பன்னாட்டு தொழிற்சாலை களுக்கு ஆதரவாகவும் தொழி லாளர்களின் உரிமைகளை மறுத்து அவர்களின் உழைப்பை சுரண்ட கூடிய ஒரு அமைப்பாக பல நேரங்களில் தமிழகத்தின் தொழி லாளர் நலத்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான ஒரு வலுவான இயக்கத்தை செங்கொடி இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற சாம்சங் தொழிலாளர்கள் தாங்கள் விரும்புகின்ற சங்கத்தை பதிவு செய்வதற்கு கூட தொழிலாளர் துறை அனுமதிக்க வில்லை. அதே நேரத்தில் அந்த தொழிற்சாலை நிர்வாகம் தொடர்ந்து தொழி லாளர்களின் உழைப்பை ஒட்ட சுரண்டுவது மட்டுமன்றி அடக்குமுறைகளை ஏவி வருகிறது. இதனை தட்டிக்கேட்கும் தீரமிக்க தொழிற்சங்கத்தை பதிவு செய்யும் உரிமையையும் மறுக்கிறது. பரந்தூர் போராட்டம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் போன்ற விவசாயம் நிறைந்த இப்பகுதியில் விவசாயிகளை வெளியேற்றக்கூடிய நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதன் மூலம் 13 ஏரிகள், 13 கிராமத்தின் நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்படும். பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களை அப்புறப்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தமட்டில், தொழில் வளர்ச்சியை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஏழை, உழைப்பாளி மக்கள் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றக் கூடிய திட்டங்களை வலுவாக எதிர்க்கிறது. ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம், பரந்தூர் உள்ளிட்ட பகுதி கிராம மக்களுடைய அனுமதி இல்லாமல் அந்த நிலத்தை எடுக்கக் கூடாது என்றுதான் நமது கட்சியின் நிலைப்பாடாகும். பன்னாட்டு விமான முனையம் வருகின்ற வேளையில் ஏராளமான தொழில் வளர்ச்சி பெருகும் என்று இன்றைக்கு மோடி அரசு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை ஒன்றிய அரசாங்கமும் அதற்கான நிலங்களை எடுத்துக் கொடுக்கும் பணிகளில் மாநில அரசாங்கமும் வேகமாக செய்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் உயர்ந்து வரும் விலைவாசியில் அவை சில மாதங்களில் கரைந்துவிடும்.
கம்யூனிஸ்டுகளின் மக்கள் பணி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 520 ஊராட்சி மன்றங்களில் 100 நாள் பணி ஏற்ற இறக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், ஒன்றிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை தொடர்ந்து குறைத்து வருகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்களின் உரிமை பறிப்பு, நலத்திட்டங்கள் பறிப்பு உள்ளிட்ட ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராக காஞ்சிபுரத்தில் செங்கொடி ஏந்தி களம் இறங்கி எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும் விபத்து, பேரிடர், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது. மாவட்ட மக்களின் தேவைகள்… காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவர்களின் தேவைக்கேற்ப அரசுக் கல்லூரி மற்றும் கல்வி நிறு வனங்கள் இல்லை. காஞ்சிபுரம் பகுதியில் விபத்து ஏற்பட்டால் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் உயிர்காக்கும் நேரமான 'கோல்டன் அவர்ஸ்' தாண்டி விடுவதால் உயிர்பலி அதிகமாக ஏற்படுகிறது. காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவ மனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிறது. ஏராளமான வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்களிடம் பணி யாற்றக்கூடிய திருபெரும்புதூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. படப்பை, திருபெரும்புதூர் பகுதிகளில் எந்த பக்கம் சென்றாலும் போக்குவரத்து நெரிசல் விழிபிதுங்குகிறது. நெரிசலைத் தவிர்க்க படப்பை யில் அமைக்கக்கூடிய மேம்பால பணி வேகமாக கட்டி முடிக்க வேண்டும், மேம்பால பணி முடியும் வரை பயன்பாட்டில் உள்ள சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். காஞ்சிபுரம், வாலாஜாபாத் பகுதிகளில் மானிய விலையில் உழவு கருவிகள் விவ சாயிகளுக்கு வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.60 கமிசன் வாங்கு வதை முழுமையாக தடை செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் இங்கு நகரமயமாக கூடிய பகுதிகளில் நகர வாழ்வு மையம் என்ற பெயரில் சில இடங்க ளில் கட்டிடங்கள் அமைத்து மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது. இவற்றில் உரிய எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து ஏழை மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் படப்பையில் நடைபெறும் சிபிஎம் மாநாடு கோரிக்கை விடுக்கிறது.