districts

img

தூய்மை பணிகளை தனியார்மயமாக்க செங்கொடி சங்கம் எதிர்ப்பு

பெருநகர சென்னை மாநகராட்சி, 5 மற்றும் 6 மண்டலங்களில் ஆகியவற்றின் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் (சிஐடியு) தொடர் இயக்கம் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக வியாழனன்று (ஆக.22) மாநகராட்சி ஆணையரிடம் தொழிலாளர்கள் நேரடியாக மனு கொடுக்கும் இயக்கத்தை நடத்தியது. 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரிசையில் நின்று மனு கொடுக்க, கூடுதல் ஆணையர்  ஜெயச்சந்திர பானு ரெட்டி பெற்றுக்கொண்டார். சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.