districts

img

பழுதடைந்த கட்டிடத்தில் ஊர் புற நூலகம்

 மதுராந்தகம், ஜூலை 12-  பழுதடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டித்  தர வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திற்குள் செங்கல்பட்டு மாவட்ட நூலக ஆணைய குழுவின் சார்பில் ஊர் புற நூலகம் ஒன்று செயல்பட்டு  வருகிறது. இந்த நூலகத்தில் இலக்கியம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், ஆன்மி கம், இந்திய குற்றவியல் சட்டம், வேலை வாய்ப்பு தயாரிப்புக்கான நூல்கள் உள்ளிட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் வாசக ர்களின் தேவைக்கு ஏற்ப நூல்கள் உள்ளன.  தற்போது செயல்பட்டு வரும் நூலக  கட்டடம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத  நிலையில் உள்ளதால் கடந்த சில தினங்களில் பெய்த சிறு மழையில் கட்டடம்  முழுவதும் ஊறி சுவர்கள் முழுவதும் நீர்  ஊற்றெடுத்து வருகிறது. இதனால் அரிய வகையான நூல்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நூலகத்தின் மேற்கூரையின் மீது பாசிபடிந்து செடி கொடிகள் வளர்ந்திருப்ப தால் கட்டடம் முழுவதும் பழுதடைந்துள்ளது. மேலும் நூலகத்திற்கு வந்துள்ள புதிய புத்தகங்கள் அடுக்கி வைக்க கூட இட மில்லாமல் மூட்டைகளாக கட்டி வைக்கப் பட்டிருக்கிறது. இவையாவும் தற்போது வீணாகிவருகிறது. இந்நிலையில் நூல கத்திற்கான புதிய கட்டடத்தைக் கட்டி நூல கத்தை விரிவு படுத்த வேண்டுமென வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து நூலகத்திற்கு வந்த வாசகர் ஒருவரிடம் கேட்டபோது தற்போது செயல்பட்டு வரும் நூலக கட்டடம் பழுதடைந்து இருப்பதால் நூலகத்திற்குள் அமர்ந்து புத்தகங்களை வாசிக்க அச்சமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் பல்வேறு தலைப்புகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை பாதுகாக்க இந்த கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைத்து மேலும் பல்வேறு தலைப்புகளில் புதிய நூல்களை வாங்கி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  இதேபோன்று தற்போது செயல்பட்டு வரும் நூலகத்திற்கு குறிப்பிட்ட சில செய்தி தாள்கள் மட்டுமே வருவதால் பல்வேறு செய்திகளை தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் அனைத்து செய்தித்தாள்களை யும் நூலகத்திற்கு வர வைத்தால் நூலகத் திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.