districts

img

தொழிலாளர் ஆணையர் உத்தரவை மீறி ஓட்டுநர்கள் நியமனம்

சென்னை, மே 5 - தொழிலாளர் துறையின் அறிவுறுத்தலை மீறி விரைவுப் போக்குவரத்து கழகம் ஒப்பந்த ஓட்டு நர்களை நியமித்து வரு கிறது. எனவே, நிர்வாகத்தின் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி வெள்ளியன்று (மே 5) தொழிலாளர் ஆணையரகம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் ஓட்டுநர் நடத்துநர்களை நியமிக்கக் கூடாது என வலியுறுத்தி ஏப்.18 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளனம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது. இத னையடுத்து தொழிலாளர் துறை தனி இணை ஆணை யர் வேல்முருகன், “ஏப். 26 அன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்படும். தொழிலாளர் பணி நிலை மைகளில் எந்த வித மாற்ற மும் (ஸ்டேட்ஸ் கோ) நிர்வாகம் செய்யக் கூடாது” என ஏப்.20 ஆம் தேதி அறிவுறுத்தினார்.

இதற்கு மாறாக, அரசு விரைவுப் போக்கு வரத்து கழகம் 100 ஒப்பந்த ஓட்டுநர்களை நிய மித்துள்ளது. இதனை கண்டித்து ஏப்.26 அன்று தொழிலாளர் ஆணையரகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தொழிலாளர் சிறப்பு இணை ஆணை யர் வேல்முருகன் முன்னி லையில் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், முடிவெடுக்கும் நிலையில் உள்ள போக்கு வரத்து கழக அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. அப்போது, தொழிலாளர் துறை அறிவுறுத்தலை மீறி போக்குவரத்து நிர்வாகம் செயல்படுகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்க முடியும். இருப்பினும், ஒப்பந்த அடிப்படையில் 58 ஓட்டுநர்கள் நிய மித்துள்ளதை நிறுத்தி வைக்க வேண்டும். மே 5 அன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும். அதில் மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு மாறாக, மேலாண்மை இயக்கு நர்களின் கோரிக்கையை ஏற்று தொழிலாளர் துறை, சமரச பேச்சுவார்த்தையை மே 16ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இவற்றை கண்டித்து வெள்ளியன்று (மே 5) தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் போராட்டம் நடத்தியது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர். துரை போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் அருள்தாஸ், பொதுச் செயலாளர் கனகராஜ், துணைத் தலைவர்கள் எஸ்.நடராஜன், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் பேசினர். மே 10 பேச்சுவார்த்தை இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த்தை சந்தித்து சம்மேளன தலைவர்கள் பேசினர். அப்போது, இந்த சமரச பேச்சுவார்த்தையில் ஆணையர் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தி னர். இதனையடுத்து, மே 10ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும், அதில் மேலாண் இயக்குநர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும. இந்த பேச்சு வார்த்தையில் ஆணையர் நேரடியாக பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.