மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் 49ஆவது வட்டக் கிளையின் சார்பில் ரமலான் விழா செவ்வாயன்று (ஏப். 18) நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி,ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்களை வழங்கினார். இதில் எஸ்.பவானி, கே.செல்வானந்தம், பி.செல்வம் (சிபிஎம்), ஏ.ஜகிருத்தீன் மன்பாஈ, யு.ஹனிபா, என்.அப்துல்மாலிக் (புதுமனை ஜாமி ஆ மஸ்ஜித்), பி.எம்.ஜமாலுதீன் (புவிநலன் விழிப்புணர்வு தொண்டு இயக்கம்), ஏ.கே.தாஜுதீன் (முஸ்லிம் மக்கள் கழகம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.