districts

ராஜஸ்தான் பெண் மருத்துவர் தற்கொலை: விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், மார்ச் 2- மருத்துவர் மீது 302ஆவது பிரிவில் வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து விழுப்புரத்தில் ஊர்வலம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா சர்மா, ஒரு பெண்ணிற்கு பிரசவ அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது அதிக ரத்த போக்கு ஏற்பட்டு அந்த பெண் இறந்த சம்பவத்தில், அவரது உறவினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் மீது 302ஆவது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யபட்டது. இதனால் மனமுடைந்த மருத்துவர் அர்ச்சனா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வலியுறுத்தியும், மருத்துவர்கள் மீது 302ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மருத்து வர் மீது வழக்கு பதிவு செய்து, அவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கத்தினர் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். மாவட்டத் தலைவர் மருத்துவர்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் மாவட்ட செயலாளர் குருநாத், பொருளாளர் வெங்கடேசன், முரளிதரன், மோகன், முத்தையா, ஆறுமுக நயினார், வெற்றிவேல் உள்ளிடோர் பங்கேற்றனர்.