சிதம்பரம், மார்.18- மிகக்குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவகல்லூரியில் ‘கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஒருவரின் உள்ளங்கை அளவில் இருந்தது. இந்த குழந்தை வெறும் 1.1 கிலோ எடை மட்டுமே இருந்துள்ளது. அந்த குழந்தை பால் குடிக்காமல், குடல் அடைப்பி னால் வாந்தி, வயிறு வீக்கத்தால் அவதி யுற்றுள்ளது. இதனை பரி சோதித்தபோது ‘மெகோனியம் இலி யஸ்’என்று நோய் தாக்கியி ருப்பதை மருத்துவர்கள் குழு கண்டறிந்தது. பின்னர், அக்குழந்தைக்கு மருத்துவர் இரவீந்திரன், மயக்கவியல் மருத்துவர்கள் தனபால், சுப்பு லட்சுமி ஆகியோர் கொண்ட குழு ஒரு மணிநேரத்தில் அறுவை சிகிச்சை செய்தது. தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது. இதுகுறித்து மருத்துவம னைக்கண்காணிப்பாளர் மருத்துவர் லாவண்யா குமாரி கூறுகையில், “இக்குழந்தையின் தாய் வெறும் 3 அடி உயரமே இருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்ததே சவா லாகவே இருந்தது. தனியார் மருத்துவ மனைகளில் இத்தகைய சிகிச்சைக்கு பல லட்சங்கள் செலவாகும்” என்றார்.