districts

img

குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக உயர்த்துக

தொழிலாளர் விரோத 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி புதனன்று (ஜூலை 10) சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே சிஐடியு சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டிஆர்இயு தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் எஸ்கே.மகேந்திரன், வி.குப்புசாமி (வடசென்னை), எம்.தயாளன், சி.திருவேட்டை (மத்திய சென்னை), எஸ்.சந்தானம் (தென்சென்னை), வி.தயானந்தம் (போக்குவரத்து), எஸ்.கண்ணன் (மின்சாரம்) உள்ளிட்டோர் பேசினர். கும்மிடிப்பூண்டி பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்  புதனன்று (ஜூலை 10) கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு  மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.அர்ஜுனன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் வி.ஜோசப், கட்டுமான சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.ஆர்.லட்சுமணன், ஒன்றிய செயலாளர் எம்.சி.சீனு  விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநாதன் ஆகியோர் பேசினர்.