சென்னை, டிச. 31 - சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் எதிர் பாராத திடீர் மழை காரண மாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக டிச.30 அன்று பிற்பகலில் மழை பெய்த முதல் 2 மணி நேரத்திலேயே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பிற்பகல் 3 மணிக்கெல்லாம் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல பிரதான சாலைகள் குளம்போல மாறின. பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு வளாகத்தில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கி உள்ளது. தரை தளத்தில் உள்ள குடியிருப்பு களுக்குள் மழைநீர் புகுந்தது. நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக, தேங்கிய நீரை அகற்ற கால தாமதம் ஏற்பட்டது. தற் போதும் வெள்ளத்தை அகற்றும் பணிகள் ஏதும் செய்யாமல் உள்ளனர். இதனால் மீண்டும் மழை நீர் காவலர் குடியிருப்புக ளுக்குள் புகுந்து உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக் கின்றனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் வழக்கு சம்பந்தமான ஆவ ணங்கள் நனையாமல் இருப்பதற்காக மேசை மீது எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் புகார் சம்பந்தமாக விசாரணை செய்ய முடியா மல் உள்ளனர்.