சிதம்பரம், டிச.1- சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதில் கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட சிசில் நகரில் இருளர் மக்கள் அதிக மாக வசிக்கும் குடிசை வீடு களில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்து செல்கிறது. இதனால், வீட்டில் சமைக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மழைக் காலங்க ளில் அவர்கள் வசிக்கும் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ளவர்கள் மிகவும் அடித்தட்டு தினக்கூலி தொழிலாளர்கள். எனவே வெள்ள பாதிப்புக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட நேரு நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இவர்களுக்கு நகர்மன்ற துணைத்தலைவர் முத்து குமரன் சிதம்பரம் நகராட்சி சார்பில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்தார்.