districts

img

மழைநீர் வடிகால்வாய் பணி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு சிபிஎம் தலைவர்களிடம் ஆணையர் வாக்குறுதி

சென்னை, ஜூன் 12 -

    பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடி கால்வாய் பணிகளுக்கான வழிகாட்டு நெறி முறைகளை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

    புளியந்தோப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி ஜனகவள்ளி (வயது 28) ஏப்.6ந் தேதி உயிரிழந்தார். சேப்பாக்கம் மசூதி தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி கனகராஜ் (வயது 37) மின்சாரம் தாக்கி ஏப்.13ந் தேதி உயிரி ழந்தார். இவர்கள் இருவருமே தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

   இந்த மரணங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் இரண்டு முறை மனு அளித்தனர். அதன்மீது மாநகராட்சி நிர்வாகம் விசாரணையும் நடத்தவில்லை, நிவாரணமும் வழங்க வில்லை. எனவே, இந்த மரணங்களுக்கு நீதி கேட்டு மே 18ந் தேதி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதிய தாக நியமிக்கப்பட்ட ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணனை சந்தித்தும் மனு அளித்தது.

நிவாரணம்

     இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து திங்களன்று (ஜூன் 12) ஆணையரை சந்தித்து மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் கே.முருகன், எழும்பூர் பகுதிக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் த.சித்தார்த்தன் ஆகியோர் முறையிட்டனர்.

   அப்போது, “முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இறந்த வர்களுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய் பணிகளின் போது தொழி லாளர்கள் நலனை பாதுகாக்கும் வகை யில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளி யிடப்பட உள்ளது” என்றும் கூறியதாக ஜி.செல்வா தெரிவித்தார்.