சென்னை, அக். 29- சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் 4ஆவது வார்டு உறுப்பினர் கேள்வி எழுப்பிய தையடுத்து மழைநீர் கால்வாய் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, இரண்டு நாட்க ளில் பணிகளை துவங்க உத்தரவிட்டனர். சென்ன மாநகராட்சி மன்றக் கூட்டம் வெள்ளியன்று (அக். 28) நடைபெற்றது. கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் இதுகுறித்து கேள்வி எழுப்பியி ருந்தார். இதற்கு பதிலளித்த மேயர் எர்ணீஸ்வரர் நகர் 4ஆவது தெருவில் `ஹியூம் பைப் வைத்து தண்ணீர் போக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றார். ஆனால் அங்கு அப்படி எதுவும் பைப் அமைக்கவில்லை என மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தெரி வித்தார். இதனால் இன்னும் இரண்டு நாளில் பைப் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையே மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். 4ஆவது வார்டு எர்ணாவூர் பகுதியில் எர்ணீஸ்வரர் நகர் பெருமாள் கோவில் தெருவில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், செயற்பொறி யாளர் உதவி செய்ய பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் இரண்டு இடங்களில் அதிகாரி கள் நேரடியாக ஆய்வு செய்து, உடனடியாக மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் இரண்டு நாட்களுக்குள் மழைநீர் கால்வாய் பணி களை துவக்க வேண்டும் என்று தெரிவித்த னர்.