செங்கல்பட்டு, ஜுன் 19-
செங்கல்பட்டு மழை பாதிப்பு காரண மாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 290 தற்காலிக முகாம் அமைக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிறன்று (ஜுன் 18) முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.திங்களன்று காலை 8 மணி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 27.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மழையால் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் பகுதி களில் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. உயிர்காக்கும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களை தங்க வைக்க 290 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. இம் முகாம்களில் பொதுமக்களைப் பாதுகாக்க தங்க வைக்க தேவையான அனைத்து வசதிகளிலும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. பொது மக்களிடம் வருகின்ற புகார்களை உடனுக்குடன் கண்காணித்து அவற்றை தொடர்புடைய துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்ய மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை சார்பில் எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ( 1077, 044 -27427412, 044 -27427412, வாட்ஸ்அப் எண்ட:- 9444272345 ) என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.