districts

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னணி ஊழியர்கள் ஆர்.பாஸ்கரன், டி.சரவணன் நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னணி ஊழியர்கள் ஆர்.பாஸ்கரன், டி.சரவணன் நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி புதனன்று (ஜூன் 14) சோழிங்கநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. மத்திய அமைப்பின் தென் சென்னை கிளை-2, ஐடிசி கோட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்வெட்டை அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் திறந்து வைத்தார். நிகழ்வுக்கு  கோட்டத் தலைவர் யு.சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ஆர்.ரவிக்குமார், டி.பழனிவேல், மூத்த தலைவர் எஸ்.அப்பனு, சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், மாநில துணைச்செயலாளர் இ.விஜயலட்சுமி, தென்சென்னை கிளை-2ன் தலைவர்  எம்.தண்டபாணி, செயலாளர் பி.கௌதமன், பொருளாளர் இ.முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹெலன் தேவ கிருபை, கோட்டச் செயலாளர் என்.பிரபுதேவா உள்ளிட்டோர் பேசினர்.