புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு சட்டப்பேரவையில் அறிவித்தபடி மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் வாகனப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கு உட்பட்ட காட்டேரிகுப்பத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியா, இடைக்கமிட்டி செயலாளர் இரகு.அன்புமணி, மாநிலக்குழு உறுப்பினர் இளவரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.