சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 133ஆவது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் கொளஞ்சியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன், மாநிலச் செயலாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.