districts

சென்னை முக்கிய செய்திகள்

தனியார்மயக் கொள்கையை எதிர்த்து  தீவிரமாக போராட வேண்டும்

தொழிலாளர்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

சென்னை, பிப். 14- பொதுத்துறை நிறுவனங் களை பாதுகாக்க ஒன்றிய அர சின் தனியார்மயக் கொள்கையை எதிர்த்து போராட தொழி லாளர்கள் முன்வர வேண்டும் என்று கே.ரவிச்சந்திரன் பணி நிறைவு பாராட்டு விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டு கோள் விடுத்தார். மின்சார வாரியத்தில் பணி யாற்றி ஓய்வுபெற்ற கே.ரவிச் சந்திரன் பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை மேற்கு கிளையின் சார்பில் அண்ணாநகரில் வியாழனன்று (பிப். 13) நடைபெற்றது. மேற்கு கிளை தலைவர் எஸ்.தசரதன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகை யில் தோழர் ரவிச்சந்திரன்  தொழிற்  சங்க பிரச்சனைகளுக்காக மட்டு மின்றி சமூக மாற்றத்திற்காகவும் போராடி வருகிறார். சிஐடியுவில் வடசென்னை மாவட்ட நிர்வாகி யாக, அம்பத்தூர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். தொழிற்சங்க பணி மட்டுமல்லாது அலுவலகப் பணி யையும் திறம்பட செய்தவர். தான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய சிந்தாந்தத்தை தொழி லாளர்களிடம் எளிய முறையில் எடுத்துச் சென்றவர். என்.எல்.சி-யில் 1982 ஆம் ஆண்டு நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 19ஆயிரம். ஒப்பந்த தொழி லாளர்கள் 500 தற்போது நிரந்தர தொழிலாளர்கள் 6,700. ஒப்பந்த தொழிலாளர்கள் 17,000 பேர். இந்த நிலைதான் அனைத்து பொதுத்துறை நிறு வனங்களிலும் நிலவுகிறது. மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து நிறுவ னங்களும் இன்று மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மின்சார வாரியத்தை முதலில் மூன்று கார்ப்பரேஷன் களாக பிரிப்பது, பின்னர் ஒவ்வொன்றாக தனி யாரிடம் ஒப்படைக்கும் முயற்சி யில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. 7 துறைமுகங்களையும், 8 விமான நிலையங்களையும் ஒன்றிய அரசு அதானிக்கு கொடுத்துள்ளது. இப்படி அனைத்து பொதுத்துறை நிறு வனங்களையும், அதன் சொத்துக்களையும் தனியாரி டம் தரைவார்க்கும் முயற்சி யில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வரு கிறது. எனவே ஒன்றிய அரசின் தாராளமயக் கொள்கைகளை, தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து தொழி லாளர்கள் போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் வி.ராஜசேகர், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில துணைத் தலைவர் கே.விஜயன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தலைவர் டி.ஜெய்சங்கர், பொருளாளர் எம்.வெங்கடேசன், துணைப் பொதுச்செயலாளர் ஆர்.ரவிக்குமார், மாநில செயலாளர் ஏ.முருகானந்தம், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மின்சாரவாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநில செய லாளர் டி.கே.சம்பத்ராவ், சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் ஆர்.ஜெயராமன், உழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தனலட்சுமி, ஜிசிசி செயலாளர் எம்.முத்து, வடசென்னை அனல்மின் நிலைய செயலாளர் ஏ.ரவி உள்ளிட்ட ஏராளாமான மாநில மாவட்ட தலைவர்களும், சகோதர சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு அவரது பணியை பாராட்டினர். முன்ன தாக மேற்கு கிளை செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ் ராவ் வர வேற்றார். பொருளாளர் சி.அஜிகுமார் நன்றி கூறினார்..

ஜாபர்கான்பேட்டையில் தடை செய்யப்பட்ட 3 இலக்கம் லாட்டரி சீட்டுகள் விற்பனை

காவல்துறை என்ன செய்கிறது? சிபிஎம் கேள்வி

சென்னை, பிப். 14 - ஜாபர்கான்பேட்டை பகுதி யில் தடை செய்யப்பட்ட 3 இலக்கம் லாட்டரிகள் சரளமாக புழங்கு கிறது. இதனை காவல்துறை தடுக்காமல் வேடிக்கை பார்ப்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உழைக்கும் மக்களின் வாழ்வை சூறையாடும் லாட்டரி சீட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பி னும், சென்னையில் ஒருசில பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனையாவதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, முறைசாரா தொழி லாளர்கள், உடலுழைப்புத் தொழி லாளர்கள் நிறைந்த பகுதிகளில் புதுப்புது பெயர்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடை பெறுகிறது. விருகம்பாக்கம் தொகுதி, 138வது வட்டம், ஜாபர்கான் பேட்டை பம்பிங் ஸ்டேசன், ஆர்வி நகர் 69வது தெரு உள்ளிட்ட இடங்களில் தடையின்றி பகல் நேரத்திலேயே 3 இலக்கம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. காவல்துறை இதனை தடுக்காமல் மெத்தன மாக உள்ளது. எனவே, மாநகர காவல்துறை ஆணையர் இதில் தலையிட்டு உரிய நட வடிக்கைளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

இந்திரதீபன் மகள் மறைவு

சென்னை,பிப்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இந்திரதீபன் மகள் இ.ரஞ்சிதம் (26) வியாழக்கிழமை  (பிப். 13) காலமானார். பெரம்பூர் முத்தமிழ் நகர் 6ஆவது பிளாக்கில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், அ.விஜயகுமார், எல்.பி.சரவணத்தமிழன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், ஜி.நித்தியராஜ், பகுதிக் குழு உறுப்பினர்கள் முரளி, கார்த்தி, சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் கொடுங்கையூர் ஆர்.வி.நகரில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இரும்பு கேட் விழுந்து சிறுமி உயிரிழப்பு

சென்னை, பிப். 14- சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் சம்பத். இவரது மகள் ஐஸ்வர்யா. வியாழன்று சம்பத் பள்ளி முடிந்ததும் தனது மகளை பைக்கில் அழைத்து வந்துள்ளார். வீடு திரும்பியதும், அடுக்குமாடி குடியிருப்பின் கேட்டை சிறுமி மூடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கேட் சிறுமி மீது சரிந்து விழுந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கேட்டை தூக்கி சிறுமியை மீட்டனர். இதில் படுகாயமடைந்த ஐஸ்வர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன  பொன் விழா மாநாடு  காரைக்காலில் நடத்த முடிவு

புதுச்சேரி, பிப்.14- புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் காரை பிரதேச செயற்குழு கூட்டம், சம்மேளன அலுவலகத்தில் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் வானவரம்பன் மற்றும் காரை பிரதேச நிர்வாகிகள்  ஷேக் அலாவுதீன்,  ஜார்ஜ் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாடு  இக்கூட்டத்தில் அரசு ஊழியர் சம்மேள னத்தின் வரலாறுகள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான தொடர்ச்சியான போராட்டங்கள் உள்ளிட்டவை சம்பந்த மாக விவாதிக்கப்பட்டது. அரசு ஊழியர் சம்மேளனத்தின் 50 ஆம் ஆண்டு பொன் விழா மாநாட்டை  வரும் ஜூன் மாதம் காரைக் காலில்  நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.

மாணவிக்கு பாலியல் தொல்லை   ஊழியர் கைது

கடலூர், பிப்.14- சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவிக்கு பாலி யல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆய்வக உதவி யாளர் கைது செய்யப் பட்டுள்ளதாக எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் தெரி வித்துள்ளார். இது குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்ட செய்தி குறிப்பில்,சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி மாணவி ஒருவர் தான் படித்து வரு கின்ற கல்லூரியில் வேதியி யல் ஆய்வகத்தில், ஆய்வக உதவியாளர் சிதம்பர ராஜன் (34) என்ப வரால் பாலியல் ரீதியாக துன்புறுத்த பட்டுள்ளதாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிப்.13 அன்று இரவு புகார் கொடுத்தார் . இந்த புகாரின் அடிப் படையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆய்வக உதவியாளர் சி.முட்லூரை சேர்ந்த சிதம்பர ராஜனை  வெள்ளிக்கிழமை (பிப்.14)  கைது செய்து விசா ரணை செய்து வருகி றோம் என்றும் தெரிவித்தி ருக்கிறார்.