சென்னை, ஏப். 25 - வீதியிலிருக்கும் மனநல பிணியாளர்கள் குறித்த தமிழ்நாடு அரசின் வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டு மென்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: “வீடுகளற்று வீதியிலிருக்கும் மனநல பிணியாளர்கள்” குறித்து அக்கறையோடு தனது முதல் வரைவு கொள்கை அறிக்கையை தமிழ்நாடு அரசு ஏப்.19 அன்று (https://nhm.tn.gov.in/en/node/6236) இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பொதுமக்களின் கருத்துக்களை கோரியிருப்பது வரவேற்கத்தக்கது. 144 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட 7 தினங்க ளுக்குள் கருத்துக்களை தெரிவிக்கவும் கூறப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களை பெற்று கொள்கை அறிக்கை உருவாக்க வேண்டுமென்தே அரசின் நோக்கம். இதனை கேள்விக்குள்ளாக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய நல குழுமத்தின் (நேஷனல் ஹெல்த் மிஷன் - தமிழ்நாடு) தமிழக பிரிவு செயல்படுகிறது. இத்தகைய அணுகுமுறையும், நடைமுறையும் ஏற்கத்தக்கதல்ல. வரைவு அறிக்கை மீது சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வீட்டுவசதித் துறை, கல்வித்துறை, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள், அரசியல் இயக்கங்கள், அமைப்புகளின் கருத்துக்களை பெற்று வரைவு அறிக்கையை இறுதி செய்ய வேண்டும். எனவே, வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவதோடு, அதன்மீது கருத்து தெரிவிக்க போதிய கால அவகாசத்தை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.