கள்ளக்குறிச்சி, நவ.7- உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ளது உ.நெமிலி ஊராட்சி மன்றம். இங்கு 2018-19 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம மகளிர் பயன்பாட்டிற்காக பொதுக் கழிப்பிடம் ரூ. 1.87 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. அதன்பிறகு, கழிப்பறை வளாகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கிராம மக்கள் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதர் மண்டிய நிலையில் உள்ள கழிப்பறை வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் தற்போது நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அப்போதும் கண்டுக்கொள்ளவில்லை.