ஒன்றிய அரசின் மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பொதுக் கூட்டம் கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் அரசம்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் மற்றும் வெகுஜன அமைப்பு தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.