மக்கள் விரோத மோடி ஆட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே பகுதிச் செயலாளர் ஆர்.விஜயகுமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில துணைத் தலைவர் ஏ.எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, பி.கே.மூர்த்தி (திமுக), சு.லெனின்சுந்தர் (சிபிஎம்), இ.மோகன்குமார்(காங்கிரஸ்), எம்.தாமோதரன் (மதிமுக), ஏ.பி.இப்ராஹிம்(விசிக) உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசினர்.