districts

குப்பை இல்லா நகராக அறிவிக்க பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்கலாம்

சென்னை, டிச. 31- சென்னை மாநக ராட்சியை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித் தல் அற்ற நகரமாகவும், குப்பை இல்லாத நகர மாகவும் அறிவிக்க பொது மக்கள் தங்கள் ஆலோ சனைகளை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற நகரமாகவும், குப்பை இல்லா மாநகராட்சியாகவும் அறிவிப்பு செய்தல் தொடர்பாக 200 வார்டு களுக்கும் சான்று பெறு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அறிவிப்பு வெளி யான 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் ஆலோசனை மற்றும் ஆட்சேபனை இருந்தால் சென்னை மாந கராட்சிக்கு solidwaste corp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது மேற்பார்வை பொறியாளர், திடக்கழிவு மேலாண்மைத் துறை, சென்னை மாநகராட்சி, சென்னை-600 003 என்ற முகவரிக்கோ கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.