திருவள்ளூர், பிப் 20- திருவள்ளூர் - செங் குன்றம் நெடுஞ்சாலையில் உள்ள விஷ்ணு வாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக நிழற் குடை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலகட்டபோராட்டங் கள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சேமிப்பு நிதியிலிருந்து ரூ.4.25 லட்சம் மதிப்பில் நிழழ்குடை அமைக்க நிர்வாக 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் பணி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. பேரத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் உள்ள தலித் மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன் படுத்துவார்கள் என்பதால் சில ஆதிக்க சாதியினர் கூட்டாக இதற்கு முட்டுக் கட்டை போட்டு வருகின்ற னர். ஏற்கெனவே உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் . இறுதி முடிவு எடுக்கும் வரை கட்டு மான பணியை துவங்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை மீறி திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுமான பணியை துவங்கியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தையை மீறி சட்ட விரோதமாக வேறு இடத்தில் கட்டுமான பணியை துவங்க உத்தரவு பிறப்பித்துள்ள பிடிஒ மீது மாவட்ட ஆட்சியர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று (பிப்.20), திருவள்ளூர் பிடிஒ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலா ளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார்.இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் கே.முருகன், கே.விஜய குமார், எஸ்.கலையரசன் ஆகியோர் பேசினர்.