districts

img

குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 வழங்குக!

சென்னை, நவ. 12 - குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7ஆயிரத்து 850 ரூபாய் வழங்க கோரி செவ்வா யன்று (நவ.12) சென்னையில் சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதி யர்களுக்கு தற்போது 2ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை குறைந்தபட்சம் 7ஆயிரத்து 850 ரூபாயாக உயர்த்த வேண்டும், சத்து ணவு, அங்கன்வாடிகளில் பதவி உயர்வு பெற்ற பல்வேறு நிலையில் உள்ள ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வூதி யம் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குடும்ப நலநிதி 50ஆயிரம் ரூபாய், இலவச மருத்துவக் காப்பீடு, மருத்துவப்படி, ஈமச்சடங்கு தொகை 25ஆயிரம் ரூபாய், பண்டிகை முன்பணம், பரிசுத்தொகையை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. சென்னை மாவட்ட திட்ட அலுவல கம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கி.தங்கம் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் பி.இராமமூர்த்தி, துணைத்தலைவர் பி.சித்திரைச்செல்வி, மாவட்டச் செயலாளர் பி.ஞானசௌந்தரி, பொருளாளர் என்.நிரஞ்சனா, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கி.இளமாறன், சென்னை மாவட்டத் தலைவர்கள் எஸ்.ஏ.வெற்றிராஜன், ஜெ.பட்டாபி உள்ளிட்டோர் பேசினர்.