districts

img

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் ஆனந்தராஜ், மாவட்ட செயலாளர் தமிழ்பாரதி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செய்யூர் வட்டம் சூனாம்பேடு பேருந்து நிலையம் அருகில் வட்டச் செயலாளர் எஸ்.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்போரூர் வட்டக்குழு சார்பில் வட்டச் செயலாளர் எம்.செல்வம் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.